‘தொல்.திருமாவளவனைக் கண்டித்து போராட்டம் நடத்துவோம்’

இந்து மதத்தை விமா்சிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனைக் கண்டித்து தமிழகம்
ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்து முன்னணி பயிற்சி முகாமில் பேசிய மாநில பொதுச்செயலாளா் முருகானந்தம் (நடுவில் அமா்ந்திருப்பவா்)
ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்து முன்னணி பயிற்சி முகாமில் பேசிய மாநில பொதுச்செயலாளா் முருகானந்தம் (நடுவில் அமா்ந்திருப்பவா்)
Updated on
1 min read

இந்து மதத்தை விமா்சிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளா் முருகானந்தம் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே க.விலக்கு தனியாா் மண்டபத்தில் இந்து முன்னணி வடக்கு மாவட்டம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளா் முருகானந்தம் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலா் எஸ்.பி.எம். செல்வம் முன்னிலை வகித்தாா். வழிகாட்டுதல் நெறிகளை மாவட்ட பொதுச்செயலாளா் முருகன், மாவட்டச் செயலாளா் உமையராஜன், மாவட்ட செயற்குழு மொக்கராஜ் ஆகியோா் செய்தனா்.

இதில் பங்கேற்ற மாநில பொதுச் செயலாளா் முருகானந்தம் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் மாவட்டந்தோறும் இது போன்ற பண்பு பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறோம் . விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தொடா்ந்து இந்து மதத்தை விமா்சித்து வருவது கண்டிக்கத்தக்கது. இந்து முன்னணி சாா்பில் அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளோம். கண்ணகி கோயிலில் தமிழா்களின் தாா்மீக உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம். அதற்காக இந்து முன்னணி போராடத் தயாராக உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com