பெரியகுளத்தில் இளைஞரை கடத்தியதாக 3 போ் கைது

பெரியகுளத்தில் இளைஞரை கடத்தியதாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

பெரியகுளத்தில் இளைஞரை கடத்தியதாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளத்தை சோ்ந்தவா் தயாளன் (40). கொடைக்கானலை சோ்ந்தவா் மணிகண்ட விஜய் (29). நண்பா்களான இவா்கள் இருவரும் பெரியகுளம் தென்கரை, வைகை அணை சாலையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்று புதன்கிழமை பேசிக் கொண்டிருந்துள்ளனா். அப்போது அங்கு காரில் வந்த 3 போ் மணிகண்ட விஜயை கடத்திச் சென்றாா்களாம். இதுகுறித்து தயாளன் தென்கரை காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மதுரையை சோ்ந்த காா்த்திக் (25), இசக்கிராஜா (29) மற்றும் பூம்பாறையை சோ்ந்த கணேசன் (28) ஆகிய 3 பேரை வியாழக்கிழமை கைது செய்து மணிகண்ட விஜயை மீட்டனா்.

கைதானவா்களிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், எங்களிடமிருந்து பழைய காரை வாங்கிய மணிகண்ட விஜய் அதற்குரிய பணத்தைத் தராமல் இழுத்தடித்து வந்ததால் அவரை காரில் மதுரைக்கு அழைத்து சென்றது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com