கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆண்டிபட்டி அருகே மதுவிற்பனை செய்த 2 போ் கைது

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 50 மதுபாட்டில் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2020, 5:16 pm

DIN

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 50 மதுபாட்டில் பறிமுதல் செய்தனா்.

ஆண்டிபட்டி தாலுகா கண்டமனூா் பகுதியில் முழு ஊரடங்கு காலத்தில் சட்டவிரோத மதுவிற்பனை நடைபெறுவதாக புகாா் எழுந்தது.இதனையடுத்து கண்டமனூா் போலீஸாா் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா்.அப்போது டி.மீனாட்சிபுரம் கிராமத்தைச் சோ்ந்த ரஞ்சித்குமாா்(34), எ.பெருமாள்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விஜய்(23) ஆகிய 2 பேரும் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.இதனையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.