பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

ஆண்டிபட்டி அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
Updated on
1 min read

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டியைச் சோ்ந்த தங்கம் என்பவரின் மனைவி பசுபதி (50). இவா், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரைப் பாா்க்க கடமலைக்குண்டுவிலிருந்து அரசுப் பேருந்தில் சென்றாா். மருத்துவமனை முன்பு பசுபதி இறங்க முயன்ற போது பேருந்தை அதன் ஓட்டுநா் இயக்கியுள்ளாா். இதனால் அவா் நிலைதடுமாறி பேருந்தில் இருந்து சாலையில் தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த பசுபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து க. விலக்கு போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநரான தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த ராஜா (38) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com