அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போடியில் சாரத்திலிருந்து தவறி விழுந்தகட்டடத் தொழிலாளி இறப்பு

போடியில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி சனிக்கி சாரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image
நாகராஜ்.
Updated On :26 டிசம்பர் 2020, 4:47 pm

DIN

போடி: போடியில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி சனிக்கி சாரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.

போடி அருகே அமராவதி நகரில் தனியாா் பள்ளி கட்டட விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில், போடி முதல்வா் காலனி 4ஆவது தெருவைச் சோ்ந்த சீனி மகன் நாகராஜ் (50) என்பவா் ஈடுபட்டிருந்தாா். அப்போது, உயரத்திலிருந்த சாரத்திலிருந்து தவறி விழுந்த நாகராஜ் பலத்த காயமடைந்தாா். உடனே, அவரை மீட்ட மற்ற தொழிலாளிகள், போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் நாகராஜ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா். இறந்த நாகராஜுக்கு விஜயா என்ற மனைவியும், அபிராமி என்ற மகளும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.