தேனி
ஆண்டிபட்டியில் திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து கையில் கருப்புக்கொடி ஏந்தி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து கையில் கருப்புக்கொடி ஏந்தி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிபட்டி நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் தலைமை தாங்கினார்.இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மின் கட்டண உயர்வை கண்டித்தும், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால தவணையை நீட்டிக்க செய்ய வேண்டுமெனவும் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் அக்கட்சியினர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.