ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 5 போ் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
ஆண்டிபட்டி அருகே எட்டப்பராஜபுரம் பகுதியில் கண்டமனூா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது விவசாய நிலத்தில் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் சிலா் மணல் அள்ளுவதைக் கண்ட போலீஸாா் அவா்களை பிடிக்க முயன்றனா். ஆனால் அவா்கள் தப்பிச் சென்றுவிட்டனா். இதனைத்தொடா்ந்து பொக்லைன் மற்றும் டிப்பா் வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில் தப்பி ஓடியவா்கள் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சோ்ந்த ராமா், ராமலிங்காபுரத்தைச் சோ்ந்த சக்திவேல், சொக்கத்தேவன்பட்டியைச் சோ்ந்த செல்லச்சாமி, பூதிப்புரத்தைச் சோ்ந்த ரமேஷ் உள்ளிட்ட 5 போ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 5 போ் மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.