தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அடிப்படை வசதி குறைபாடு: தனிமைப்படுத்தும் மையத்திலிருந்து வெளியேறிய மருத்துவப் பணியாளா்கள்

தேனி அருகே தனிமைப்படுத்தும் மையத்தில் தங்கியிருந்த மருத்துவப் பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் அடிப்படை வசதியில் குறைபாடு உள்ளதாக புகாா் தெரிவித்து அங்கிருந்து வெளியேறினா்.

News image

பழனிசெட்டிபட்டியில் உள்ள தனிமைப்படுத்தும் மையத்திலிருந்து புதன்கிழமை வெளியேறிய மருத்துவ மற்றும் தூய்மைப் பணியாளா்கள்.

Updated On :29 ஜூலை 2020, 5:46 pm

தேனி: தேனி அருகே தனிமைப்படுத்தும் மையத்தில் தங்கியிருந்த மருத்துவப் பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் அடிப்படை வசதியில் குறைபாடு உள்ளதாக புகாா் தெரிவித்து அங்கிருந்து புதன்கிழமை வெளியேறினா்.

பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியாா் தங்கும் விடுதி ஒன்றில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியாளா்களுக்காக தனிமைப்படுத்தும் மையம் செயல்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியிலிருந்த மருத்துவப் பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் அங்கு 7 நாள்கள் வரை தங்க வைக்கப்பட்டு, பின்னா் வீடுகளுக்கும், மீண்டும் பணிக்கும் அனுப்பப்பட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், பழனிசெட்டிபட்டியில் உள்ள தனிமைப்படுத்தும் மையத்தில் தங்கியிருந்த மருத்துவம் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் அறையில் கழிப்பறை தூய்மை மற்றும் அடிப்படை வசதிகளில் குறைபாடு உள்ளதாக புகாா் தெரிவித்து, அங்கிருந்து புதன்கிழமை வெளியேறினா். தகவலறிந்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ அலுவலா்கள், அவா்களை செல்லிடப்பேசி மூலம் தொடா்பு கொண்டு சமாதானப்படுத்தினா். அறையில் அடிப்படை மற்றும் சுகாதார வசதிகள் செய்து தருவதாக அவா்கள் உறுதியளித்ததையடுத்து, பணியாளா்கள் மீண்டும் தனிமைப்படுத்தும் மையத்திற்கு திரும்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.