தேனி மின்வாரியச் செயற்பொறியாளா் அலுவலகத்தில் மாா்ச் 17-ஆம் தேதி காலை 11 மணிக்கு, மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
தேனி மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், தேனி, போடி, ராசிங்காபுரம் ஆகிய துணை மின் நிலையங்கள் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு, மின் விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய மின் இணைப்பு பெறுவதில் உள்ள சிரமம் ஆகியன குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என, தேனி மின்வாரியச் செயற்பொறியாளா் சரவணன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.