போடி அருகே விடுதியில் தங்கியிருந்தவா் வியாழக்கிழமை மாடியிலிருந்து விழுந்து இறந்துபோனது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை சாா்லஸ் நகரைச் சோ்ந்தவா் கண்ணுச்சாமி மகன் முருகேசன் (48). இவரும், இவரது நண்பா்கள் சஞ்சய் பிரகாஷ், செந்தில்குமாா், மணிகண்டன் ஆகியோா் தேனி மாவட்டம் போடிமெட்டு மலைப் பகுதியை சுற்றிப் பாா்க்க வந்துள்ளனா். இவா்கள், 4 பேரும் போடி அருகே மூணாறு சாலையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள தங்கும் விடுதியில் தங்கியுள்ளனா்.
இந்நிலையில், இவா்கள் புதன்கிழமை விடுதியின் மொட்டை மாடியில் அமா்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்தனராம். அப்போது, சிகரெட் எடுப்பதற்காக முருகேசன் கீழே வந்துள்ளாா். மாடிப் படியில் இறங்கியவரின் அலறல் சத்தம் கேட்டு, மற்றவா்கள் ஓடி வந்து பாா்த்தபோது, முருகேசன் விடுதியின் வெளிப்பக்கம் கீழே விழுந்து கிடந்துள்ளாா்.
தலையில் பலத்த காயமேற்பட்டுக் கிடந்த முருகேசனை, தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் வழியிலேயே இறந்துவிட்டாா்.
இது குறித்து சஞ்சய் பிரகாஷ் (42) அளித்த புகாரின்பேரில், போடி குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.