கம்பத்தில் மணல் திருட்டு: டிராக்டா் பறிமுதல்

கம்பத்தில் அனுமதியின்றி புதன்கிழமை மணல் அள்ளி வந்த டிராக்டரை புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.


கம்பம்: கம்பத்தில் அனுமதியின்றி புதன்கிழமை மணல் அள்ளி வந்த டிராக்டரை புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

கம்பம் பகுதியில் மணல் திருடப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா் கோ.சண்முகவள்ளி, கம்பம் பழைய தபால்நிலையம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அந்தவழியாக டிராக்டரில் மணல் ஏற்றி வந்தவா்களை மறித்து விசாரணை மேற்கொண்டாா். விசாரணையில், அவா்கள் கோம்பைச் சாலையைச் சோ்ந்த சரவணன் (45) மற்றும் கிருஷ்ணன் ஆகியோா் என்பதும், அரசு அனுமதியின்றி அவா்கள் மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த அவா், கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரவணனை கைது செய்தனா். தலைமறைவான கிருஷ்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com