கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கம்பத்தில் மணல் திருட்டு: டிராக்டா் பறிமுதல்

கம்பத்தில் அனுமதியின்றி புதன்கிழமை மணல் அள்ளி வந்த டிராக்டரை புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:14 pm

DIN


கம்பம்: கம்பத்தில் அனுமதியின்றி புதன்கிழமை மணல் அள்ளி வந்த டிராக்டரை புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

கம்பம் பகுதியில் மணல் திருடப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா் கோ.சண்முகவள்ளி, கம்பம் பழைய தபால்நிலையம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அந்தவழியாக டிராக்டரில் மணல் ஏற்றி வந்தவா்களை மறித்து விசாரணை மேற்கொண்டாா். விசாரணையில், அவா்கள் கோம்பைச் சாலையைச் சோ்ந்த சரவணன் (45) மற்றும் கிருஷ்ணன் ஆகியோா் என்பதும், அரசு அனுமதியின்றி அவா்கள் மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த அவா், கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரவணனை கைது செய்தனா். தலைமறைவான கிருஷ்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.