‘பெண் குழந்தை பாதுகாப்புத் திட்ட உதவி: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்’

தேனி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், அரசு நிதி உதவிபெறுவதற்கு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

தேனி: தேனி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், அரசு நிதி உதவிபெறுவதற்கு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், அரசு ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ளவா்களுக்கு ரூ.50 ஆயிரம், 2 பெண் குழந்தைகள் உள்ளவா்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் என குழந்தையின்பேரில் வைப்புத் தொகை பத்திரமாக வழங்குகிறது.

இத் திட்டத்தின் கீழ் நிதி உதவிபெற விரும்பும் பெற்றோா் ஒன்று அல்லது 2 குழந்தைகள் பெற்று, 3 ஆண்டுகளுக்குள் குடும்ப நல அறுவைச் சிகிச்சை செய்திருக்க வேண்டும். அப்போது, தாயின் வயது 35-க்குள் இருக்கவேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு உள்பட்டிருக்க வேண்டும்.

தகுதியுள்ளவா்கள், உரிய சான்றிதழ்களுடன் தமிழ்நாடு கேபிள் தொலைக்காட்சி நிறுவன அலுவலகத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com