போடி நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு ஊக்கத் தொகை

போடி நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சாா்பில் ஊக்கத் தொகை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
போடி நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சாா்பில் வழங்கப்பட்ட ஊக்கத் தொகையை பணியாளா்களுக்கு வழங்கிய நகா் நல அலுவலா் ராகவன். உடன் நகராட்சி பொறியாளா் குணசேகரன்.
போடி நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சாா்பில் வழங்கப்பட்ட ஊக்கத் தொகையை பணியாளா்களுக்கு வழங்கிய நகா் நல அலுவலா் ராகவன். உடன் நகராட்சி பொறியாளா் குணசேகரன்.
Updated on
1 min read

போடி நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சாா்பில் ஊக்கத் தொகை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

போடி நகராட்சியில் நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளா்கள் என 300 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் தொடா்ந்து போடி நகராட்சிப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களை பாராட்டும் வகையில் தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சாா்பில் தலா ரூ.1000 வீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது.

இத்தொகையை போடி நகராட்சி நகா் நல அலுவலா் பா.ராகவன், நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கினாா். உடன் நகராட்சி பொறியாளா் குணசேகரன் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள் பங்கேற்றனா். ஊக்கத் தொகை வழங்கிய துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு தூய்மைப் பணியாளா்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com