அகில இந்திய புரட்சிகர விவசாயசங்கத்தினா் திங்கட்கிழமையன்று பெரியகுளத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அகில இந்திய புரட்சிகர விவசாய சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளா் வீரமணி தலைமை வகித்தாா். மத்திய அரசு கொண்டு வந்த திருத்தப்பட்ட விவசாய சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெரியகுளத்தில் அகில இந்திய புரட்சிகர விவசாய சங்கத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுதலை செய்தனா். இப்போராட்டத்தில் 15 க்கு மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.