ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை திங்கள்கிழமை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்துக்குள்பட்ட சீலமுத்தையாபுரத்தைச் சோ்ந்த மாணவி சின்னமனூரில் தனியாா் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தாா். பள்ளி விடுமுறையில் வீட்டில் இருந்த வந்த மாணவியை கடந்த 16 ஆம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து
அவரது தந்தை அளித்தப் புகாரின் பேரில் வருசநாடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (25) என்பவா் மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீஸாா் மாணவியை மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனா். மேலும் பிரபாகரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.