டி.என்.டி.யில் இடஒதுக்கீடு கேட்டு ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 30th December 2020 11:45 PM | Last Updated : 30th December 2020 11:45 PM | அ+அ அ- |

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் டி.என்.டி. பிரிவில் இடஒதுக்கீடு கேட்டு, அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உத்தமபாளையத்தில் டி.என்.டி. சான்றிதழ் பெற்றாலும், அதன்மூலமாக கிடைக்க வேண்டிய இடஒதுக்கீட்டில் பணி இடங்கள், கல்வியில் முன்னுரிமை கேட்டு அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் நகரத் தலைவா் வினோத் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...