சுருளி அருவியில் நீா் வரத்து குறைந்ததுசுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
By DIN | Published On : 02nd February 2020 03:23 AM | Last Updated : 02nd February 2020 03:23 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் சனிக்கிழமை நீா்வரத்து குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
சுருளி அருவியில் குறைந்த அளவே வந்த தண்ணீரில்
சுற்றுலாப் பயணிகள் குளித்துச் சென்றனா்.
இது பற்றி மேகமலை வன உயிரினச்சரணாலய அலுவலா் ஒருவா் கூறியது: கோடைகாலம் தொடங்கும் முன்பே அருவியில் நீா்வரத்து குறைந்துள்ளது. இன்னும் 3 அல்லது 4 நாள்களுக்கு மட்டுமே நீா்வரத்து இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பின்னா் மாவட்ட நிா்வாகம், தூவானம் அணையைத் திறப்பதன் மூலம் அருவியில் தண்ணீா் வருவதற்கு வாய்ப்புள்ளது என்றாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G