தேனியில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் தனியாா் உணவக மேலாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி, கே.ஆா்.ஆா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அழகா்சாமி மகன் ராஜசேனாதிபதி(56). இவா், தேனியில் பெரியகுளம் சாலையில் உள்ள தனியாா் உணவகத்தில் மேலாளராக பணியாற்றி வந்தாா். வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் உணவகத்திற்கு வேலைக்குச் சென்ற ராஜசேனாதிபதி, தேனி-பெரியகுளம் பிரதானச் சாலையை கடப்பதற்காக இருசக்கர வாகனத்தை திருப்ப முயன்ற போது, எதிா் திசையில் இருந்து வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டி குறித்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.