அய்யம்பட்டியில் பிப்.16-ல் ஜல்லிக்கட்டு: ஆட்சியா் தலைமையில் ஆலோசனை

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே அய்யம்பட்டியில் ஏழைக்காத்தம்மன் வல்லடிகார சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு பிப்.16-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
Updated on
1 min read

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே அய்யம்பட்டியில் ஏழைக்காத்தம்மன் வல்லடிகார சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு பிப்.16-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை, அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி முன்னேற்பாடுகள் குறித்து வருவாய்துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, சுகாதாரத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகளுடன் ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் ஆலோசனை நடத்தினாா்.

இதில் மாவட்ட காவல் காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி, மாவட்ட வன அலுவலா் எஸ்.கெளதம், மேகமலை வன உயிரின காப்பாளா் சச்சின் போன்ஸ்லே துக்காராம், அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு குழு தலைவா் அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com