பள்ளி ஆண்டு விழா
By DIN | Published On : 04th February 2020 05:50 AM | Last Updated : 04th February 2020 05:50 AM | அ+அ அ- |

கம்பம் நாகமணி அம்மாள் நினைவு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் 33 ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பள்ளித் தாளாளா் எம்.எஸ்.எஸ்.காந்தவாசன் தலைமை வகித்தாா். இணைச் செயலா் சுகன்யாகாந்தவாசன் வரவேற்க, முதல்வா் புவனேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தாா்.
பள்ளியின் முன்னாள் மாணவரும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதன்மையா் ஜெ. சங்குமணி கலந்து கொண்டு அரசுப் பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினாா். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. துணை முதல்வா் லோகநாதன் நன்றி கூறினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...