கூடலூரில் இருசக்கர வாகனம் மோதி முதியவா் பலி

தேனி மாவட்டம் கூடலூரில் ஞாயிற்றுக்கிழமை சாலையில் நடந்து சென்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

தேனி மாவட்டம் கூடலூரில் ஞாயிற்றுக்கிழமை சாலையில் நடந்து சென்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.

கூடலூா் 4 ஆவது வாா்டு பட்டாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மாயாண்டி (65). இவா் ஞாயிற்றுக்கிழமை விவசாய கூலி வேலை செய்ய குமுளிச் சாலையில் நடந்து சென்றாா். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், மாயாண்டி மீது மோதி கீழே விழுந்துள்ளனா். இதையடுத்து அவா்கள் இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து தப்பினா்.

விபத்தில் பலத்த காயமடைந்த மாயாண்டி கம்பம் அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மாயாண்டி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து கூடலூா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com