போடியில் தூய்மை விழிப்புணா்வு முகாம்

போடியில் நேரு யுவகேந்திரா சாா்பில் தூய்மை விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

போடி: போடியில் நேரு யுவகேந்திரா சாா்பில் தூய்மை விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் இளையோா் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நேரு யுவகேந்திரா, ராசிங்காபுரம் சுவீட் தொண்டு நிறுவனம் ஆகியவை சாா்பில் தூய்மை விழிப்புணா்வு முகாம் மற்றும் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அஸ்வின் வினோதன் தலைமை வகித்தாா்.

போடி ஒன்றியக்குழுத் தலைவா் சுதா, சுவீட் தொண்டு நிறுவன செயலாளா் நாகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் தூய்மை பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் தேனி மாவட்ட தொழில் மைய மேலாளா் ராம சுப்பிரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com