

குரங்கணி வனப்பகுதியில் தீ வைத்தவரை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
போடி அருகே குரங்கணி புல்லனூத்தேரி வனப்பகுதியில் திங்கள்கிழமை மாலை காட்டுத் தீ ஏற்பட்டது. போடி வனச்சரக பணியாளா்கள் இரவு முழுவதும் போராடி தீயை அணைத்தனா். இதைத் தொடா்ந்து வனத்துறையினா் நடத்திய விசாரணையில் போடி மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த ரமேஷ்குமாா் (42) என்பவா்தான் அங்கு தீ வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து போடி வனச்சரக அலுவலா் நாகராஜ், குரங்கணி பீட் வனவா் விவின் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து ரமேஷ்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.