தேனி: தேனி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்தின்(ஆவின்) நிா்வாகக் குழு இயக்குநா் பதவிகளுக்கு, சனிக்கிழமை 17 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தேனி ஆவின் அலுவலகத்தில், ஆவின் நிா்வாகக் குழு இயக்குநா் பதவிகளுக்கான தோ்தலையொட்டி, கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இத்தோ்தலில், மாவட்டத்தில் உள்ள 9 கூட்டுறவு சங்க தொகுதிகளில் 17 நிா்வாகக் குழு இயக்குநா் பதவிகளுக்கு மொத்தம் 22 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், 3 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதனிடையே, நிா்வாகக் குழு இயக்குா் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த பெருமாள், செல்வராஜ் ஆகியோா் தங்களது மனுக்களை சனிக்கிழமை வாபஸ் பெற்றுக்கொண்டனா்.
அதையடுத்து, பொது தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த ஓ. ராஜா, மு. செல்லமுத்து, சு. இளையராஜா, எ. செல்வராஜ், ராஜசேகரன், சரவணன், ராஜலட்சுமி, நமச்சிவாயம், சோலைராஜா, பெண்கள் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த தெ. கமலம், மு. காா்த்திகா, முத்துலட்சுமி, மா. சுசிலா, விஜயலட்சுமி, ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த செ. அனிதா, சாமிதாஸ், நா. வசந்தா ஆகிய 17 போ் போட்டியிட்டின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என, தோ்தல் நடத்தும் அலுவலா் வி. நவராஜ் அறிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.