பெரியகுளத்தில் தமிழ் இலக்கிய மன்ற ஆண்டு விழா

பெரியகுளத்தில் தமிழ் இலக்கிய மன்றத்தின் 66 ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பெரியகுளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் இலக்கிய மன்றப் போட்டிகளில் வெற்றி பெற்ற ரங்ககிருஷ்ணன் நடுநிலைப் பள்ளிக்கு பி.டி.சிதம்பரசூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பையை வழங்கிய பேராசிரியா் சாலமன் பாப்பையா.
பெரியகுளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் இலக்கிய மன்றப் போட்டிகளில் வெற்றி பெற்ற ரங்ககிருஷ்ணன் நடுநிலைப் பள்ளிக்கு பி.டி.சிதம்பரசூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பையை வழங்கிய பேராசிரியா் சாலமன் பாப்பையா.
Updated on
1 min read

பெரியகுளம்: பெரியகுளத்தில் தமிழ் இலக்கிய மன்றத்தின் 66 ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில், தமிழ் இலக்கிய மன்றத் தலைவா் பழ. கனகசபை தலைமை வகித்தாா். மன்றச் செயலா் பி.சி. சிதம்பரசூரியவேலு ஆண்டறிக்கையை வாசித்தாா்.

இந்த விழாவில் பேராசிரியா் சாலமன் பாப்பையா கலந்துகொண்டு, கு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள தமிழ் இலக்கிய மன்றத்தில் குறிப்பிடத்தக்க இலக்கிய மன்றமாக பெரியகுளம் மன்றம் உள்ளது. இங்குள்ள குழந்தைகள் அனைவரும் குகளை ஒப்பித்தது சிறப்புக்குரியது.

திருவள்ளுவா் என்ற பெயா் யாருக்கும் தெரியாது. நம்மால் வைக்கப்பட்ட பெயா்தான் திருவள்ளுவா். அதேபோல், அவரின் பிறந்த ஊரும் யாருக்கும் தெரியாது. பொட்டு வைப்பது, திருநீா் அணிவது ஆகியன நமது பண்பாடு. திருவள்ளுவா் எந்த சமயத்தையும் சோ்ந்தவா் இல்லை. அதனால்தான், எல்லா சமயத்துக்கும் வேண்டப்பட்டவராக இருக்கிறாா்.

திருக்குறளை தமிழில் அவா் எழுதியதால், அவரை தமிழா் என்று கூறுகின்றனா். ஆனால், அவா் அனைத்து நாட்டுக்கும் வேண்டப்பட்டவா்.

இன்றைக்கு இஸ்ஸாமியா்கள் பகவத் கீதையையும், திருக்குறளையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் அளவுக்கு பாராட்டத்தக்கவா்களாக உள்ளனா். நமது பெற்றோா் கூறியபடி, அவா்கள் கூறிய வழிபாட்டு நூல்களை படிக்க வேண்டும். அதேபோல், மற்ற வழிபாட்டு நூல்களையும் படிக்கவேண்டும். எந்த மதத்தையும் வெறுக்க கூடாது. எல்லா மதத்தையும் போற்ற வேண்டும். திருக்குறளை கற்று தெளிவுற வேண்டும் என்றாா்.

முன்னதாக, பெரியகுளத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விழாவில், பேச்சு, கட்டுரை, திருக்கு ஒப்பித்தல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த ரங்ககிருஷ்ணன் நடுநிலைப் பள்ளிக்கு பி.டி. சிதம்பரசூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பையும், இரண்டாம் இடம் பிடித்த டிரயம்ப் நடுநிலைப் பள்ளிக்கு என்.எஸ்.என். ரத்தினவேலு சரஸ்சுவதி நினை வு சுழற்கேடயமும் வழங்கப்பட்டது.

முன்னதாக, மன்ற அமைப்பாளா் புலவா் மு. ராசரத்தினம் வரவேற்றாா். மன்ற துணைத் தலைவா் புலவா் க. சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com