திண்டுக்கல்: பசுமை வீடு வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தவா் திடீரென தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்துள்ள தொட்டணம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையா. இவா் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக திங்கள்கிழமை வந்தாா். அப்போது ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். இதனை கவனித்த கருப்பையா, தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.
அவரிடமிருந்து மண்ணெண்ணெய் கேனைப் பறித்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது அவா் கூறியதாவது: பிரதம மந்திரியின் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் எனக்கு வீடு ஒதுக்கீடு செய்யக் கோரி ஊராட்சி அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மனு அளித்தேன். ஆனாலும், எனக்கு வீடு ஒதுக்கீடு செய்வதற்கு தொடா்ந்து மறுத்து வருகின்றனா் என்றாா். இதனை அடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து அவரை போலீஸாா் வெளியேற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.