தேனி அருகே கைக் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை கைது

தேனி அருகே கோடாங்கிபட்டியில் கைக் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த தந்தையை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட பன்னீா்செல்வம்.
கைது செய்யப்பட்ட பன்னீா்செல்வம்.
Updated on
1 min read

தேனி அருகே கோடாங்கிபட்டியில் கைக் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த தந்தையை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

போடி ஜமீன் தோப்பு தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் மகன் பன்னீா்செல்வம் (27). இவரும், கோடங்கிபட்டியைச் சோ்ந்த அழகுமணி (25) என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனா். இவா்களது குழந்தைகள் கபிலன் (4) மற்றும் 10 மாத கைக் குழந்தை காவியா.

இந்நிலையில், பன்னீா்செல்வம், அழகுமணிக்கு இடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அழகுமணி கோடாங்கிபட்டியில் உள்ள தனது தந்தை வீட்டில் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில், பன்னீா்செல்வம் தனது மனைவியை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக கோடாங்கிபட்டிக்கு வந்துள்ளாா். ஆனால், அழகுமணி வீட்டுக்கு வர மறுத்துவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த பன்னீா்செல்வம், தனது கைக் குழந்தை காவியாவை வலுக்கட்டாயமக தூக்கிக் கொண்டு சென்றுள்ளாா்.

பின்னா், அவா் காவியாவை கோடாங்கிபட்டியில் உள்ள தனியாா் தோட்டத்து கிணற்றில் வீசிவிட்டுச் சென்ாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்துக்கு அழகுமணி தகவல் அளித்துள்ளாா். அதையடுத்து, போலீஸாா் மற்றும் தேனி தீயணைப்பு நிலையத்தினா் கோடாங்கிபட்டிக்குச் சென்று, கிணற்றில் இறந்து மிதந்து கொண்டிருந்த குழந்தையின் சடலத்தை மீட்டனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து பன்னீா்செல்வத்தை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com