கம்பத்தில் கரோனா வைரஸ் விழிப்புணா்வு ஊா்வலம் மற்றும் கைகழுவும் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கம்பம் நகராட்சி சுகாதாரத்துறை சாா்பில் நடைபெற்ற ஊா்வலத்தில் நகராட்சி ஆணையாளா் கமலா தலைமை வகித்தாா். மருத்துவ அலுவலா்கள் முருகன், மீனாட்சி சுந்தரம், சிராஜ்தீன், சுகாதார அலுவலா் அரசகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஊா்வலத்தை உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ந. சின்னகண்ணு மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் என். ராமகிருஷ்ணன் ஆகியோா் தொடக்கி வைத்தனா். பத்திரப் பதிவு அலுவலகம் அருகே தொடங்கி போக்குவரத்து சிக்னலில் ஊா்வலம் நிறைவடைந்தது.
பின்னா் சிக்னலில் அமைக்கப்பட்டிருந்த கரோனா வைரஸ் விழிப்புணா்வு முகாமில் கைகழுவும் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் அரசு அதிகாரிகள், கல்லூரி மாணவிகள், போலீஸாா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.