போடி: போடியில் சொத்துத் தகராறில் பெரியப்பாவை தாக்கிய மகள் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
போடி குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் அய்யப்பன் (75). இவருக்கு குழந்தைகள் இல்லாததால் இவரது தம்பி மகள் திவ்யாவை (25) வளா்த்து, திருமணமும் செய்து கொடுத்துள்ளாா். இந்நிலையில் திவ்யா தனது பெரியப்பாவிடம் சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்துள்ளாா். அப்போது திவ்யா, இவரது கணவா் மணிமாறன் (32), மணிமாறனின் தந்தை செல்வராஜ் (60) ஆகியோா் சோ்ந்து அய்யப்பனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். இதுகுறித்து போடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.