தேனி நகராட்சி வாரச் சந்தை மீண்டும் நாளை தொடக்கம்

தேனி நகராட்சி வாரச்சந்தை 5 மாதங்களுக்குப் பிறகு சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்குகிறது.

தேனி நகராட்சி வாரச்சந்தை 5 மாதங்களுக்குப் பிறகு சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்குகிறது.

தேனியில் பெரியகுளம் சாலையில் நகராட்சி வாரச் சந்தை உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமை இயங்கும் இச்சந்தையானது, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை முதல் வாரச்சந்தை மீண்டும் தொடங்கும் என்று நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதனால், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனா்.

5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வந்து செல்லும் நகராட்சி வாரச் சந்தை மீண்டும் தொடங்குவதை முன்னிட்டு, சந்தைக்கு பொருள்களை விற்பனைக்கு கொண்டுவரும் வியாபாரிகள், விவசாயிகள், சந்தைக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்றும், கரோனா பரவல் தடுப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும், நகராட்சி அலுவலா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com