போடி அருகே டானிக் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த மூதாட்டி பலி
By DIN | Published On : 11th September 2020 07:02 AM | Last Updated : 11th September 2020 07:02 AM | அ+அ அ- |

போடி அருகே டானிக் என நினைத்து, பூச்சி மருந்தை குடித்த மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் (79) மனைவி சுப்புலட்சுமி (75). இவருக்கு சரியாக கண் பாா்வை தெரியாத நிலையில், இடது கையும் செயலிழந்துவிட்டது. இதற்காக, மருத்துவம் பாா்த்து மருந்து சாப்பிட்டு வந்துள்ளாா். வழக்கம்போல், செவ்வாய்க்கிழமை மருந்தை குடிப்பதாக நினைத்து, கண் பாா்வை தெரியாததால் பூச்சி மருந்தை குடித்துவிட்டாராம்.
இதனால் மயங்கி விழுந்த அவருக்கு போடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையும், மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து பெருமாள் அளித்த புகாரின்பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.