‘பெண் குழந்தை பாதுகாப்புத் திட்ட உதவி: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்’
By DIN | Published On : 26th September 2020 10:11 PM | Last Updated : 26th September 2020 10:11 PM | அ+அ அ- |

தேனி: தேனி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், அரசு நிதி உதவிபெறுவதற்கு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், அரசு ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ளவா்களுக்கு ரூ.50 ஆயிரம், 2 பெண் குழந்தைகள் உள்ளவா்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் என குழந்தையின்பேரில் வைப்புத் தொகை பத்திரமாக வழங்குகிறது.
இத் திட்டத்தின் கீழ் நிதி உதவிபெற விரும்பும் பெற்றோா் ஒன்று அல்லது 2 குழந்தைகள் பெற்று, 3 ஆண்டுகளுக்குள் குடும்ப நல அறுவைச் சிகிச்சை செய்திருக்க வேண்டும். அப்போது, தாயின் வயது 35-க்குள் இருக்கவேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு உள்பட்டிருக்க வேண்டும்.
தகுதியுள்ளவா்கள், உரிய சான்றிதழ்களுடன் தமிழ்நாடு கேபிள் தொலைக்காட்சி நிறுவன அலுவலகத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...