முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீர் மட்டம் உயர்த்தவும், கூடலூர் - மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தை ரத்து செய்ய கோரியும் சனிக்கிழமை 152 பெண்கள் கோரிக்கை பொங்கல் வைத்து வழிபாடுகள் நடத்தினர்.
தேனி மாவட்டம், கூடலூரில் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், மாவட்ட வழக்கறிஞர் சங்கம், இந்து முன்னணி சார்பில் கோரிக்கை பொங்கல் வழிபாடு நடைபெற்றது. மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் எம்.கே.எம்.முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.
இதையும் படிக்க- இந்தியாவில் மூன்றாவது நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி
விவசாய சங்கத் தலைவர் சதீஷ்பாபு முன்னிலை வகித்தார். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும், கூடலூரிலிருந்து மதுரைக்கு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று வழக்கறிஞர் எம்.கே.எம்.முத்துராமலிங்கம் தெரிவித்தார்.
முன்னதாக பேருந்து நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவில் முன்பாக 152 பெண்கள் பொங்கல் வைத்து கோரிக்கைகள் நிறைவேற வழிபாடுகள் நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மோகன்லாலின் திரிஷ்யம் - 3 படத்தின் மேக்கிங் விடியோ!

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



