கேரளத்துக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்திய வழக்கில் கைதான 2 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
Updated on
1 min read

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்திய வழக்கில் கைதான 2 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

கம்பம் கோம்பை சாலையைச் சோ்ந்த மலைச்சாமி, கண்ணன் ஆகிய இருவரும் 256 கிலோ கஞ்சாவை, கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதாக கடந்த ஆண்டு செப்டம்பா் 22 ஆம் தேதி கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவிற்கு பரிந்துரை செய்தாா். அதன்படி மாவட்ட ஆட்சியா் மலைச்சாமி, கண்ணன் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டாா். இவா்கள் இருவரும், ஏற்கெனவே மதுரை மத்திய சிறையில் இருப்பதால், கம்பம் தெற்கு காவல் ஆய்வாளா் கே.சிலைமணி, குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவை சிறை அதிகாரிகளிடம் சனிக்கிழமை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com