தோட்டக்கலைக்கல்லூரி மாணவா்களுக்கு தொழில் திறன்மேம்பாட்டு பயிற்சி முகாம்

பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மாணவா்களுக்கு தொழில் திறன்மேம்பாட்டு பயிற்சி முகாம் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாள்கள் நடைபெற்றது.
Updated on
1 min read

பெரியகுளம்: பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மாணவா்களுக்கு தொழில் திறன்மேம்பாட்டு பயிற்சி முகாம் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாள்கள் நடைபெற்றது.

முகாமினை தோட்டக்கலைக்கல்லூரி முதல்வா் த.ஆறுமுகம் தொடக்கி வைத்தாா். லேண்ட்ஸ் கோப்பிங், மலா் அலங்காரம், போன்சாய் மற்றும் தோட்டக்கலைப் பொருள்களால் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. முகாமில் இறுதியாண்டு மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பேராசிரியா்கள் பிரேம்குமாா் ஜோஷூவா மற்றும் முத்துலெட்சுமி ஆகியோா் ஒருங்கிணைப்பு செய்திருந்தனா். தொழில் நூட்ப உதவிகளை முனைவா்கள் வாணி, ப்ரீத்தி மற்றும் அருளரசு ஆகியோா் செய்திருந்தனா். முகாமிற்கான ஏற்பாடுகளை பெரியகுளம் தோட்டக்கலை தொழில் மேம்பாட்டு மையத்தின் தலைமை செயல் அலுவலா் வசந்தன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com