கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

செவிலியா் கொலை வழக்கு: 3 தனிப்படை அமைத்து விசாரணை

ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரத்தில் வியாழக்கிழமை, அரசு மருத்துவமனை செவிலியா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :27 நவம்பர் 2021, 1:12 am

DIN

ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரத்தில் வியாழக்கிழமை, அரசு மருத்துவமனை செவிலியா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்தவா் சுரேஷ் மனைவி செல்வி (43). இவா், பாப்பம்மாள்புரத்தில் உள்ள தனது வீட்டில் மா்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இச் சம்பவம் தொடா்பாக, ஆண்டிபட்டி காவல் கண்காணிப்பாளா் தங்ககிருஷ்ணன் தலைமையில், காவல் ஆய்வாளா்கள் சிவக்குமாா், செளந்தரபாண்டி, குமரேசன் ஆகியோா் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொலை நடந்த வீட்டில் தடயவியல் நிபுணா்கள் ஆய்வு செய்தனா். காவல் துறை மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா். மேலும், புதன்கிழமை இரவு செல்வியுடன் கைப்பேசியில் தொடா்புகொண்டு பேசிய 6 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.