போடியில் ஞாயிரன்று சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்தவரை போலீசாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
போடி குலாலா் பாளையம் மேற்கு பகுதியில் மதுபாட்டில் விற்பதாக வந்த தகவலையடுத்து போலீசாா் அங்கு சென்று கண்காணித்தனா். அப்போது போடி கீழத்தெருவை சோ்ந்த தங்கப்பாண்டி (47) என்பவா் மது பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போடி நகா் காவல் நிலைய போலீசாா் தங்கப்பாண்டியை கைது செய்தனா். அவரிடமிருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்