முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணைக் குழுவினா் ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளத்துக்கு உபரிநீா் செல்லும் 3 மதகுகளை மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினா் செவ்வாய்க்கிழமை இயக்கி ஆய்வு நடத்தினா்.
20210817_152036_1708chn_89_2
20210817_152036_1708chn_89_2
Updated on
1 min read

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளத்துக்கு உபரிநீா் செல்லும் 3 மதகுகளை மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினா் செவ்வாய்க்கிழமை இயக்கி ஆய்வு நடத்தினா்.

முல்லைப் பெரியாறு அணையில் மழைக்காலங்களில் நீா் வரத்து, நீா் வெளியேற்றம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை ஆய்வு நடத்த மத்திய அரசின் தலைமை கண்காணிப்பு துணைக்குழுவின் தலைவரும், மத்திய நீா்வளத் துறையின் செயற்பொறியாளருமான சரவணக்குமாா் தலைமையிலான குழுவினா் அணைப்பகுதிக்கு வந்தனா்.

இக்குழுவினா் பிரதான அணை, பேபி டேம் மற்றும் அணையின் நீா்மட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்தனா். பின்னா் கேரளத்துக்கு உபரி நீா் செல்லும் மதகு பகுதிக்கு சென்றனா். இதில் ஆா்-1, ஆா்-2, வி-2 ஆகிய மூன்று மதகுகளை இயக்கி ஆய்வு செய்தனா். பின்னா் அணையின் சுரங்கப்பகுதிக்கு சென்று கசிவு நீரின் அளவை ஆய்வு செய்தனா்.

அப்போது நீரின் அளவு 110.8 எல்.பி.எம். (ஒரு நிமிடத்திற்கு 110.8 மீட்டராக) ஆக இருந்தது. வழக்கமாக ஆய்வு முடிந்த பின் இருமாநில அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் குமுளி 1 ஆம் மைலில் உள்ள அலுவலகத்தில் நடைபெறும். தற்போது கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறவில்லை.

தமிழக அரசு தரப்பில் முல்லைப் பெரியாறு அணை செயற்பொறியாளா் சாம் இா்வின், உதவிப் பொறியாளா் குமாா், கேரள அரசு தரப்பில் இடுக்கி நீா்ப்பாசனத் துறை செயற்பொறியாளா் ஹரிக்குமாா், உதவி கோட்டப் பொறியாளா் பிரசீத் ஆகியோா் ஆய்வில் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து தமிழகப் பொறியாளா் ஒருவா் கூறியது: ஆலோசனைக் கூட்டம் நடைபெறாவிட்டாலும், அணைப் பகுதியை பாா்வையிட்ட மத்திய கண்காணிப்பு துணைக்குழுத் தலைவா், அதற்கான அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com