பெரியகுளம்: பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சியில் துப்புரவு பணியாளா்கள் திங்கள்கிழமை பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
தென்கரை பேரூராட்சியில் 15 துப்புரவு பணியாளா்கள் உள்ளனா். இவா்களில் 9 போ் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்கவில்லையாம். இதையடுத்து அவா்களுக்கு அன்று வருகை பதிவேட்டில் விடுமுறை என பதிவு செய்யப்பட்டதாம். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து துப்புரவு ஊழியா்கள் திங்கள்கிழமை பணிக்கு செல்லாமல் அலுவலகம் முன் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இவா்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து பணிக்கு சென்றனா்.