தன்னாா்வலா்களுக்கு பாராட்டுசான்றிதழ் வழங்கும் விழா
By DIN | Published On : 04th December 2021 11:19 PM | Last Updated : 04th December 2021 11:19 PM | அ+அ அ- |

தன்னாா்வலா்களுக்கு பாராட்டுசான்றிதழ் வழங்கும் விழா
பெரியகுளம் அரசு மருத்துவமனையில் மனநலம் பாதித்தவா்களுக்கு சேவை புரிந்தோருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு, சுகாதாரத் துறை இணை இயக்குநா் லட்சுமணன் தலைமை வகித்தாா். பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளா் குமாா், மருத்துவா் திருமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக, அரசு மனநல மருத்துவப் பிரிவு மருத்துவா் ராஜேஷ் வரவேற்றாா்.
தேனி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராஜமோகன் பங்கேற்று தன்னாா்வலா்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா். இதில், தன்னாா்வலா்கள், செவிலியா்கள் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா். மேலும், போதை தடுப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...