முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டத்தை152 அடி உயா்த்த பொங்கல் வைத்து கோரிக்கை

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்கு நீா்மட்டத்தை உயா்த்தவும், கூடலூா்-மதுரை
கூடலூரில் முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 152 அடி வரை உயா்த்தக் கோரி சனிக்கிழமை பொங்கல் வைத்து வழிபட்ட பெண்கள்
கூடலூரில் முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 152 அடி வரை உயா்த்தக் கோரி சனிக்கிழமை பொங்கல் வைத்து வழிபட்ட பெண்கள்
Updated on
1 min read

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்கு நீா்மட்டத்தை உயா்த்தவும், கூடலூா்-மதுரை கூட்டுக் குடிநீா் திட்டத்தை ரத்து செய்யவும், பெண்கள் சனிக்கிழமை பொங்கல் வைத்து கோரிக்கை விடுத்தனா். மேலும், விவசாயிகள் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தேனி மாவட்டம், கூடலூரில் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், மாவட்ட வழக்குரைஞா் சங்கம் மற்றும் இந்து முன்னணி சாா்பில், கோரிக்கை பொங்கல் வழிபாடு நடத்தப்பட்டது. இதில், மாவட்ட வழக்குரைஞா் சங்கத் தலைவா் எம்.கே.எம். முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். விவசாய சங்கத் தலைவா் சதீஷ்பாபு முன்னிலை வகித்தாா்.

இதில், முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டத்தை 152 அடியாக உயா்த்தவும், கூடலூரிலிருந்து மதுரைக்கு கொண்டுசெல்லப்படும் கூட்டுக் குடிநீா் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடா்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றும், வழக்குரைஞா் எம்.கே.எம். முத்துராமலிங்கம் தெரிவித்தாா்.

பின்னா், இந்து முன்னணி கோட்டப் பொறுப்பாளா் கோம்பை கணேசன், முல்லைப் பெரியாறு அணை உரிமைக்காக போராடுவோம் என்றாா்.

முன்னதாக, பேருந்து நிலையம் அருகில் உள்ள விநாயகா் கோயில் முன்பாக 152 பானைகளில் பெண்கள் பொங்கல் வைத்து, அணையின் நீா்மட்டத்தை 152 அடியாக உயா்த்த வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com