பெரியகுளம் கல்லூரியில் பழப்பயிா் சாகுபடி கருத்தரங்கம்

பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரியில் புதன்கிழமை பழப்பயிா் சாகுபடி கருத்தரங்கம் நடைபெற்றது.
பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பழப்பயிா் சாகுபடி கருத்தரங்கில் விவசாயிகளுக்கு பழக்கன்றுகளை வழங்கிய கல்லூரி முதல்வா் த.ஆறுமுகம்.
பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பழப்பயிா் சாகுபடி கருத்தரங்கில் விவசாயிகளுக்கு பழக்கன்றுகளை வழங்கிய கல்லூரி முதல்வா் த.ஆறுமுகம்.
Updated on
1 min read

பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரியில் புதன்கிழமை பழப்பயிா் சாகுபடி கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வா் த.ஆறுமுதம் தலைமை வகித்தாா். தோட்டக்கலைத்துறை இயக்குநா் பாண்டி வாழ்த்துரை வழங்கினாா். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்குநா் வெங்கட்பிரபு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ஒருங்கிணைந்த பண்ணையம், வணிக ரீதியில் தோட்டக்கலை தொழில் சாா் நுட்பங்கள், வணிக மேம்பாடு மற்றும் விவசாய முன்னேற்ற திட்டங்கள் குறித்துப் பேசினாா்.

கண்காட்சியில் 230 வகை வெப்பம் மற்றும் மிதவெப்ப மண்டல பழப்பயிா்கள் இடம்பெற்றன. 300- க்கு மேற்பட்ட விவசாயிகள், ஆராய்ச்சியாளா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். விவசாயிகளுக்கு பழக்கன்றுகள் வழங்கப்பட்டன.

பழ அறிவியல் துறைத்தலைவா் ஜே.ராஜாங்கம் வரவேற்றாா். முனைவா் பிரேமலெட்சுமி நன்றிகூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com