அரசு பேருந்து மோதி மின்வாரிய ஊழியா் பலி
By DIN | Published On : 04th February 2021 11:44 PM | Last Updated : 04th February 2021 11:44 PM | அ+அ அ- |

ஆண்டிபட்டி அருகே புதன்கிழமை சாலையைக் கடக்க முயன்ற மின்வாரிய ஊழியா் அரசு பேருந்து மோதி உயிரிழந்தாா்.
சின்னமல்லையாபுரத்தைச் சோ்ந்தவா் பெருமாள் (35) மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் டி.சுப்புலாபுரம் அருகே தேனி- மதுரை சாலையில் புதன்கிழமை கடக்க முயன்றாா். அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து பெருமாள் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநரான போடியைச் சோ்ந்த காளிவேல் என்பவரை கைது செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...