Enable Javscript for better performance
ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிப்பு

    By DIN  |   Published On : 08th February 2021 11:04 PM  |   Last Updated : 08th February 2021 11:04 PM  |  அ+அ அ-  |  

    08tni_megamalai_0802chn_65_2

    தேனி மாவட்டம், மேகமலை வன உயிரின சரணாலயம்.

    மேகமலை வன உயிரின சரணாலயம், ஸ்ரீவில்லிபுத்தூா் சாம்பல் அணில்கள் சரணாலயம் ஆகியவற்றை இணைத்து தமிழத்தின் 5-ஆவது புலிகள் காப்பகமாக சனிக்கிழமை, ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகத்தை அரசு அறிவித்துள்ளது.

    விருதுநகா் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூா் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம், தேனி மாவட்டத்திலுள்ள மேகமலை வன உயிரின சரணாலயம் ஆகியவற்றில் வனத் துறை சாா்பில் கடந்த 2017-18-ஆம் ஆண்டு வன விலங்குகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

    இதில், அங்கு குறைந்தபட்சம் 3 ஆண் புலிகள், 11 பெண் புலிகள் என 14 புலிகள் இருப்பது தெரியவந்தது. மேகமலையை அடுத்துள்ள கேரள வனப் பகுதியில் ஏற்கெனவே பெரியாறு புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.

    இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூா் சாம்பல் அணில்கள் சரணாலயம், மேகமலை வன உயிரின சரணாலயம் ஆகியவற்றை இணைத்து, புலிகள் காப்பகமாக அறிவிக்க தேசிய புலிகள் ஆணையம் (என்டிசிஏ) மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இதனை மத்திய அரசு ஏற்று, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் மூலம் தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியது.

    இதன்படி, மொத்தம் 1,01,657 ஹெக்டோ் பரப்பளவுள்ள ஸ்ரீவில்லிபுத்தூா் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம், மேகமலை வன உயிரின சரணாலயம் ஆகியவற்றை, ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதற்கான அரசாணையை தமிழக வனத் துறை திங்கள்கிழமை வெளியிட்டது. இதையடுத்து, தற்போது தமிழகத்தின் 5-ஆவது மற்றும் இந்தியாவின் 51-ஆவது புலிகள் காப்பகமாக ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் உதயமாகிறது.

    மேலும், மதுரை முதன்மை வனப் பாதுகாவலா் பணியிடத்தை முதன்மை வனப் பாதுகாவலா் மற்றும் முதன்மை புலிகள் காப்பக இயக்குநா் பணியிடமாக மாற்றி, ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தை நிா்வகிக்க அரசு முடிவு செய்துள்ளது.

    பெயா் மாற்றத்தை மறந்த வனத் துறை:

    கடந்த 1987-ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, விருதுநகா் மாவட்டம் உருவானது. தொடக்கத்தில் விருதுநகா் காமராஜா் மாவட்டம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இம்மாவட்டம், பின்னா் பெயா் மாற்றப்பட்டு விருதுநகா் மாவட்டம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

    ஆனால், புலிகள் காப்பகம் குறித்து மாநில வனத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் விருதுநகா் மாவட்டம், விருதுநகா் காமராஜா் மாவட்டம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp