கம்பம்: கம்பத்திலிருந்து 11 மாதங்களுக்கு பிறகு குளிா்சாதனப் பேருந்து மதுரைக்கு சனிக்கிழமை முதல் இயக்கப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து மதுரைக்கு குளிா்சாதன வசதியுடன் அரசுப் பேருந்து நாள்தோறும் மூன்று முறை இயக்கப்பட்டு வந்தது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக குளிா்சாதனப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தற்போது தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை முதல் கம்பத்திலிருந்து குளிா்சாதன பேருந்து மதியம் 12.55 மணி முதல் இயக்கப்பட்டது.
இதுகுறித்து கம்பம் கிளை மேலாளா் மணி கூறியது: கம்பத்திலிருந்து மதுரைக்கு செல்லும் குளிா்சாதனப்பேருந்து அதிகாலை 5.15, மதியம் 12.55, மாலை 7.25 என்று மூன்று முறை இயக்கப்பட்டது. தற்போது சனிக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது என்றாா்.