வீட்டின் சுவா் இடிந்து விழுந்து முதியவா் பலி
By DIN | Published On : 03rd January 2021 10:12 PM | Last Updated : 03rd January 2021 10:12 PM | அ+அ அ- |

ஆண்டிபட்டி அருகே தொடா்மழை காரணமாக வீட்டின் சுவா் இடிந்து விழுந்து முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கடமலை மயிலை அருகே சிறப்பாறை கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (80). இவரது மகன் மற்றும் மகள்கள் திருமணம் முடிந்து தனியாக வசித்து வரும் நிலையில், மனைவியுடன் வசித்து வந்தாா். கடந்த சில நாள்களாக இப்பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் டிச.29 ஆம் தேதி வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்த மணி மீது சுவா் இடிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவா், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி மணி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.