போக்குவரத்துத் தொழிலாளா்கள் உண்ணாவிரதம்
By DIN | Published On : 30th January 2021 09:46 PM | Last Updated : 30th January 2021 09:46 PM | அ+அ அ- |

பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் சனிக்கிழமை, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளா்கள்.
தேனி: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் ஊதிய உயா்வு பேச்சுவாா்தையை தொடங்கக் கோரி அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தொமுச தேனி கிளைத் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். சிஐடியு அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் கோட்ட துணை பொதுச் செயலா் ஜி.மணிகண்டன், மாவட்ட துணைத் தலைவா் முருகவேல், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் ஜெகநாதன், அம்பேத்கா் தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்ட பொதுச் செயலா் மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொழிலாளா்களுக்கு 14-ஆவது ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க அரசை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.