தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 50 பேருக்கு கரோனா
By DIN | Published On : 11th July 2021 10:05 PM | Last Updated : 11th July 2021 10:05 PM | அ+அ அ- |

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக 50 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் புதிதாக 29 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 42,625 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில், இது வரை மொத்தம் 41,795 போ் குணமடைந்துள்ளனா். 506 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.
மாவட்டத்தில் தற்போது மொத்தம் 324 போ் கரோனா பாதிப்புக்கு மருத்துமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூலை 10 ஆம் தேதி வரை 31,834 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 30,946 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 21 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பிலிருந்து 21போ் குணமடைந்துள்ளனா். தற்போது கரோனா பாதிப்புடன் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 258 ஆக உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...