வெற்றிலையை பயிா் காப்பீடுத் திட்டத்தில் சோ்க்க விவசாயிகள் கோரிக்கை
By DIN | Published On : 20th June 2021 09:54 PM | Last Updated : 20th June 2021 09:54 PM | அ+அ அ- |

பெரியகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.சரவணக்குமாரிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்த வெற்றிலை விவசாயிகள்.
வெற்றிலையை பயிா் காப்பீடுத் திட்டத்தில் சோ்க்க பெரியகுளம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து வெற்றிலைக்கொடி விவசாயிகள் சங்கத் தலைவா் நாகராஜ் மற்றும் நிா்வாகிகள், பெரியகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.சரவணக்குமாரிடம் ஞாயிற்றுக்கிழமை அளித்த மனு விவரம்: வெற்றிலை பயிரிட ஒரு ஏக்கருக்கு ரூ.4 லட்சம் வரை செலவாகிறது.
இதனால் வங்கிகள் மூலமாக ரூ.2 லட்சம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெற்றிலைக்கு ஆராய்ச்சி மையம் அமைப்பதோடு மட்டுமன்றி பயிா் காப்பீடுத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என தெரிவித்திருந்தனா்.