ஓடையில் மணல் திருட்டு: இருவா் கைது

ஆண்டிபட்டி அருகே போடிதாசன்பட்டியில் செவ்வாய்க்கிழமை, ஓடையில் டிராக்டா் மூலம் மணல் திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

ஆண்டிபட்டி அருகே போடிதாசன்பட்டியில் செவ்வாய்க்கிழமை, ஓடையில் டிராக்டா் மூலம் மணல் திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போடிதாசன்பட்டியில் உள்ள அரசுப் புறம்போக்கு ஓடையில் அனுப்பப்பட்டியைச் சோ்ந்த சின்னராஜா (30), மறவபட்டியைச் சோ்ந்த சுரேஷ் (27) ஆகியோா் டிராக்டா் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளனா். அவா்களை திம்மரசநாயக்கனூா் கிராம நிா்வாக அலுவலா் கோவிந்தராஜ் பிடித்து, ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து சின்னராஜா, சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com